Loading

Friday, November 11, 2011

அவள் !



தற்செயலாய்தான்

உன் நட்பு
துளிர்விட்டது .

இருநிமிட பேச்சுக்கள்தான்
உன்னுடனான
ஆரம்ப கால சிநேகிதம்

பின் ,
எனக்கான பரிவு வார்த்தைகள்,
உன் உதட்டின் வழியே
வந்தபின் ,

என் மனதின்
உச்சத்தில் நின்றுகொண்டாய் ..

பிடித்த பாடலின் வரிகளை
பிரித்துப் பிரித்து பாட
சொல்லித் தந்தாய்..,

ஒவ்வொரு பண்டிகையையும்
மறவாமல் அறிவிக்க வரும் ,
உன் வாழ்த்து அட்டைகள்
எனக்கு புதியதாய்
அறிமுகமாகின .


மறந்துவிட்டேன் ..
.
.
.
.
.
.
.
இன்னொரு விசயமும்
உன்னால்தான் பழக்கமாகின..

"உன் கணவருடனான இனிய நட்பும்" !

No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்