Loading

Wednesday, December 28, 2011

முற்றுப் பெறாத முல்லைபெரியாறு பிரச்சினை !


பொதுவாக ,தமிழனுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் ,அதன் தீர்வுக்கு உடனடியாக எதையும் யோசிக்காமல் தீக்குளிப்பு என்ற கூர்மையில்லாத ஆயுதத்தை பயன்படுத்துவார்கள் .இந்த முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் ஓரிருவர் தீக்குளித்து இறந்ததாக செய்திகள் வந்தது .

அதையும் தாண்டி ,.தமிழக மக்கள் அனைவருக்கும் ,இந்த முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ,கேரள அரசின் பிடிவாதத்தை வெறுக்கிறார்கள் என்பதை தெளிவாக அறிய முடிந்தது .தினமும் ,சில ,பல போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கிறது .

அணையின் நீர்மட்டத்தை முன்னமே உயர்த்த சொல்லி ,நீதிமன்றம் உத்தரவிட்டும் ,சற்றும் செவி சாய்க்காமல் கேரள அரசு இருந்தபோதே ,நாம் உயிர்ப்புடன் போராடியிருக்க வேண்டும் .அந்த நேரத்தில் யாருமே கண்டுகொள்ளவில்லை . எந்த ஒரு பிரச்சினையையும் ஆரப் போட்டு செய்வது ,தமிழக அரசின் கொள்கையாகி விட்டது.

முன்பெல்லாம் ,சிவகங்கை ,ராமநாதபுரத்தில் ,முப்போகம் விளைந்தது... அதற்கு மிக முக்கியமான காரணமாய் ,சதுரகிரிமலை தண்ணீரும் ,முல்லைபெரியாறு தண்ணீரும் அதிக பங்களித்து ..கடந்த பத்து ஆண்டுகளாக ,மழையை மட்டுமே நம்பி  ,இந்த மாவட்டங்கள் விவசாயம் செய்கிறார்கள் .இதை கேட்க ஒரு நாதியும் இல்லை .
அரசியல் தலைவர்களும் ,கடமைக்கு மத்திய அரசை கண்டித்து கடமையை முடித்துக் கொள்கிறது

 நம் பங்குக்கு நாமும் ...எங்கோ ஒரு கடற்கரையில் ,கூட்டத்தை நடத்திவிட்டு ,பிரச்சினையை ஆரப்போடுவதுதான் ..கண்ணுக்கெட்டிய தூரம்வரை சிறந்த ? வழியாக தெரிகிறது!

Saturday, December 10, 2011

என்ன செய்யலாம் உன்னை ?


நீ செய்த காரியத்திற்கு
உன்னை என்ன செய்யலாம் ?

குளியலறையில்
ஈரம்சொட்ட இருமணிநேரம்,
நிற்கவைக்கலாமா ?

தூக்கநேரத்தில்
துரியோதனின் துஷ்ப்ரயோகத்தை
அரங்கேற்றி விடலாமா ?

இல்லை ,28ம் தேதி வேளையில்,
உன்னை அந்தப்புரத்திற்கு,
அவசரமாக அழைக்கலாமா ?

சில முக்கிய இடங்களில்
காயத்தை ஏற்ப்படுத்தி
ஆச்சர்யப்படுத்தலாமா ?

இந்த நான்கில்
என்ன தண்டனை கொடுக்கலாம் ?

நீ செய்த சக்கரை இல்லாத கேசரிக்காக .

எங்கே போனது ?


எங்கே போனது
உன் பொழிவான முகம் ?

உன் துறுதுறு
கேலிப்பேச்ச்சும் ,
கிண்டலுடன் வரும்
வசிய வார்த்தைகளும்
எங்கே போனது ?

அனைவரையும் கவர
உபயோகப்படுத்தும் ஸ்டைல்களும்,
நல்ல விசயங்களை
தேடுகின்ற அக்கறையும்
எங்கே போனது ?

இவையனைத்தையும் விட ,
உன் வெள்ளைமனது
இன்று சிதிலமடைந்திருப்பதற்கு
காரணமென்ன ...?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அட செல்ல மகளே .
டீச்சர் திட்டியதற்காகவா இத்தனை அலங்கோலம் ?


Sunday, December 4, 2011

அப்பாவுக்கு பிடித்த தேவ் ஆனந்த்!

நேற்று காலை ,பழம்பெரும் நடிகரும் ,ஹிந்தி திரைப்பட உலகில் ,சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகர் , தேவ் ஆனந்த் ( 26 September 1923 – 3 December 2011)   லண்டனில்
 காலமானார் !:-( . இருபது வருடங்களுக்கு முன்பு ,என் வீட்டில் ,தேவ்ஆனந்த் படங்களின் ஆடியோ கேசட்டுக்கள் ,மலை மலையாக குவிந்திருக்கும் . அப்பாவுக்கு தேவ் ஆனந்தின் படங்கள் என்றாலே கொள்ளை இஷ்டம் ! நேற்று அவர் இறந்த செய்தியை கேட்டு  
வருத்தமடைந்த
அப்பா ,பழைய நினைவுகளையும் ,அவருடைய படங்களை பற்றியும்  என்னுடன் பகிர்ந்து கொண்டார் !

தேவ்ஆனந்த் ,இந்திய அப்பாக்கள் ,தாத்தாக்கள் நெஞ்சில் இன்றும் வாழ்கிறார் ..என்னுடைய நெஞ்சிலும் !




பரிணாம காதல் கவிதைகள் !



நீ துப்பிய எச்சிலை,
 எடுத்து பார்த்தேன் ,
கவிதையாக தோன்றியது .retweet.

என் மனதை திருடியது நீதானென ,
நேற்று உன் அம்மா 
ஜவுளிக்கடையில் 
சேலை திருடியதை வைத்து புரிந்துகொண்டேன் !retweet

ஆண் கழிப்பறை முகப்பில் என் படமும் ,
பெண் கழிப்பறை முகப்பில் உன் படமும்
 பொருத்தி பார்த்தேன் ! 
சூப்பர் ஜோடியென பட்சி சொல்லியது !retweet

நீ வாய் கொப்பளித்த நீரை ,
துப்பிவிடாதே ,முழுங்கிவிடு ,
சிறு ஜீவன்கள் பிழைத்து போகட்டும் !retweet

உனக்கும் எனக்கும் 
பொருத்தம் ஓகே தான் ,
உன் அப்பன் டோங்லீ வாயனுக்கும்
 எனக்கும்தான் ஒத்துப்போகவே மாட்டேங்குது!retweet


Saturday, December 3, 2011

அபோகலிப்டோ (சினிமா 2006)

நான் பார்த்த திரைப்படங்களில் , என் மனதை கொள்ளைகொண்ட படங்களின் வரிசையில் அபோகலிப்டோ திரைப்படம் முக்கிய அங்கம் வகிக்கிறது ..மெல்கிப்சன் இயக்கிய இந்த ஆக்சன் கலந்த வரலாற்றுப் படம் ,பார்த்த அனைவரையும் வியக்கவைக்குமென்றால் அது மிகையல்ல !

அபோகலிப்டோ !பதினாறாம் நூற்றாண்டில் கதை ஆரம்பிக்கிறது .

பழங்குடி மக்களில் ,ஒரு குழுவினர் ,மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் ..உணவை வேட்டையாடி ,தன் குடும்பத்திற்கு கொடுப்பது என்று வளமையாக சென்றுகொண்டிருக்கும் அவர்களின் வாழ்க்கையில் ,மற்றொரு அரக்க குணம் படைத்த பழங்குடி இனம் இந்த மக்களை வேட்டையாடுகிறது !அவர்களின் வாழ்விடங்களை தீ வைத்து , பெண்களை சூறையாடி ,ஆண்களை அடிமைப்படுதுகிறார்கள் .இந்த நேரத்தில்,
கதையின் நாயகன் ,தன் கர்ப்பிணி மனைவியையும் ,பையனையும் காப்பாற்ற எண்ணி ,அவர்களை பெரிய பள்ளத்தில் இறக்கிவிடுகிறார் .எல்லாரையும் அடிமைப்படுத்திய எதிரி கும்பல் ,நாயகனின் அப்பாவை தீர்த்து கட்டுகிறார்கள் ..பிடிபட்ட மக்களை கயிற்றால் கட்டி இழுத்துச்செல்கிறார்கள். .கைகள் கட்டப்பட்ட நாயகன் தன் மனைவி இருக்கும் இடத்தை பார்க்க ,சந்தேகப்பட்ட எதிரிப்படைவீரன் ஒருவன் , மரத்தில் கட்டப்பட்ட கயிறை வெட்டிவிடுகிறான்.
 
அடிமைப்படுத்தப்பட்ட மக்களை ,எதிரிப்படையின் முகாமுக்கு இழுத்துச் செல்கிறார்கள் ,பெண்களை ஏலத்தில் விட்டுவிட்டு ஆண்மக்களை ,கடவுள் பெயரில் பலியிடுகிறார்கள் .நாயகனை பலி கொடுக்குப்போகும்  நேரத்தில் .சூரியன் மறைய ,கடவுள் திருப்தியடைந்தாரென எண்ணி  ,நாயகனுடன் iசேர்த்து மற்ற அடிமைகளையும் அப்புறப்படுத்துகிறார்கள். அங்கிருந்து ஒரு மைதானத்தில் ,அடிமைகளை ஓடவிட்டு வேட்டையாடுகிறார்கள் .அதிலிருந்து தப்பிக்கும் நாயகன் ,தான் வாழ்ந்த காட்டுப்பகுதிக்கு ,தன் உயிரைக்காப்பாற்றிகொள்ள   ஓடுகிறார் .
ஆத்திரமடைந்த எதிரிப்படை ,நாயகனை வெறிகொண்டு துரத்துகிறார்கள் ..நாயகன் தப்பித்தானா ? பள்ளத்தில் இறக்கிவிட்ட மனைவி ,மக்களை காப்பாற்றினானா ? எதிரிப்படை என்ன ஆனது ? என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் ...



இந்த படத்தின் விசேஷம் என்னவென்றால் ,இன்றைய வாழ்வில் ,சிறு சிறு விசயங்களுக்கு கூட அலுத்துக்கொள்ளும் நாம் ,தன் உயிரை காப்பாற்ற ,பலவித துன்பங்களை சகித்துக்கொள்ளும் நாயகன் ,நாயகனின் மனைவிக்கு முன்னால்,நம்முடைய  பிரச்சினையெல்லாம் சாதாரனமென எண்ணத்தோன்றுகிறது.  !

தனி மனித வாழ்க்கை போராட்டத்தை ,இத்தனை சுவாரசயத்துடன் எடுத்த மெல்கிப்சனுக்கு ஒரு சல்யூட் !

பிரபலமான பதிவுகள்