Loading

Tuesday, May 23, 2017

புதிய ஜென் கதை

துறவி? ஒருவர் ,ஆட்டையாம்பட்டி ஆசாமியை தேடி வந்திருந்தார் .
என்ன விசயமென ஆசாமி கேட்டதும்,
துறவி அழுது வடிந்து கொட்ட ஆரம்பித்தார்.

ஆசாமி ஐயா,
என்னிடம் போதுமான அளவுக்கு,
பணமிருக்கிறது ,
பல பங்களாக்கள் இருக்கிறது,
எக்கச்சக்கமாக வளைத்து போட்ட புறம்போக்கு நிலமிருக்கிறது,
அரசியல் பலமிருக்கிறது,
மீடியா பலமிருக்கிறது,
பெண் சிஷ்யைகள் இருக்கிறார்கள்,
ஆனாலும் ,வாழ்க்கை மீது, ஒரு குறை இருக்கிறதாக என் மனதிற்குள் படுகிறது,
இன்னும் நாம் முன்னேற வேண்டுமோ என மனம் ஏங்குகிறது ?
இதற்கு ஏதும் வழியிருக்கா ஆசாமியென
புலம்பி முடித்தார் துறவி  ?

இதை புன்முறுவலுடன் அமைதியாக கேட்டு முடித்த,
ஆட்டையாம்பட்டி ஆசாமி,
என்றாவது நீ ரேஷன் கடை கியுவில் நின்றிருக்கிறாயா ?
என்றாவது ,நீ பால்காரன்,
எப்போது பால் கொண்டு வருவானா என காத்திருக்க்கிறாயா ?
மாசக்கடைசியில் மளிகை சாமான் வாங்க காசில்லாமல் அல்லாடியிருக்க்கிறாயா ?
5000ரூபாய் கடனுக்காக பேங்க் மேனேஜரிடம் வசவு வாங்கியிருக்கிறாயா ?
,மாதா மாதம் வாகனங்களுக்கு EMI கட்ட முடியாமல் திண்டாடியதுண்டா?
குறைந்தபட்சம் மனைவியிடமோ,அம்மாவிடமோ ,அரசு ஊழியர்களிடமாவது திட்டு வாங்கியிருக்கிறாயா ?
என ஆசாமி அடுக்கியதும்,
துறவிக்கு வேர்த்து கொட்டியிருந்தது.

இதை எல்லாம் நீ அனுபவித்தால்,
வாழ்க்கை மீதான புரிதல் ஏற்படும்,
யாரையும் இப்படி ஏமாற்றி பிழைக்காதிருக்க வழி ஏற்படுமென 
ஆசாமி ,சொல்லி முடித்தார்.

இதை கேட்ட துறவிக்கு ,மனம் தெளிந்தது.
ஆசாமியா அடிபட்டு சாகுறதை விட,
சாமியாரா வேஷம் கட்டி சந்தோசமா சல்லாபிச்சுட்டு இருக்கலாமென்ற கொள்கையுடன்,ஆசாமியிடமிருந்து,
ஆடி காரில் விடைபெற்றான் துறவி .

1 comment:


  1. அஹா அருமை
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்