Loading

Tuesday, February 28, 2017

இந்தி(தீ)ய அரசியல் !!!

ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்ன,
ரானுவ வீரன் சாப்பாடு சரியா போடலைனு ஒரு வார்த்தைதான்
சொன்னான் .தேசமே மத்திய அரசை கேவலமா பார்த்துச்சு.
இப்ப அந்த ராணுவ வீரன் ,சரியா வேலை பார்க்கலைனு சொல்லி  சஸ்பெண்ட் செய்யப்பட்டு வச்சிருக்கிறதா நியுஸ் வருது.

இதே மாதிரி போன மாசம் ,ஜல்லிக்கட்டு,விவசாய பிரச்சினைக்கு ,தன்னெழுச்சியா போராட வந்த மாணவர்களுக்கு,6நாளா அரசாங்கமும்,மீடியாவும்,நடிகர்களும்  பாராட்டு தெரிவிச்சுட்டு இருந்தானுங்க ஆனா அடுத்த 7வது நாள் போராடுன மாணவர் எல்லாரும்
"சமூக விரோதிகள்,
"ஐஎஸ்ஐஎஸ் ",
"அல்கொய்தா " தொடர்பு இருக்குனு இவனுங்களே கூச்சப்படாம சொல்லி ,FIR ரெடி பண்ணி ,அதை சட்டசபைலயே சொல்லி அசிங்கப்படுத்தி முடிக்கிறானுங்க.

நாளைக்கு நெடுவாசல்ல போராடுற அப்பாவி மனிதர்களையும் தேச துரோகினு (இப்பவே ஒருத்தன் கூவிட்டான்) கார்ப்பரேட் காசை துன்னுட்டு கதை ரெடி பண்ணாலும் ஆச்சர்யப்படுறதிக்கில்லை .

இப்படித்தான் ,சுவாதி கொலை வழக்குல மர்மம் இருக்குனு பேச்சுதான் எழுந்துச்சு,அடுத்த இருபது நாள்ல ராம்குமார் கரண்ட் வயர கடிச்சு செத்துட்டதா பிணத்தை தரானுங்க.

பத்து நாள் முன்னாடி,
ஒரு டாக்டர் ,ஜெ மரணம் பத்தி பேசுன வீடியோ வாட்ஸ்சப்ல பரவுச்சு.
இப்ப அந்த டாக்டரே போலி டாக்டர்னு
இவனுங்களே செர்ட்டிபிகேட் ரெடி பண்ணி ஜெயிலுக்கு அனுப்பிட்டானுங்க.

நாளைக்கு லண்டன் டாக்டர்
ரிச்சர்ட் பீலே ,உண்மைய உளரினாலும் ,அந்தாளு டாக்டரே இல்லை,கொசு மருந்து அடிக்க அப்பல்லோவுக்கு வந்தவன் சார்ன்னு கூச்சப்படாம சொல்வானுங்க.
ஏன்னா ..இங்க சிஸ்டம் டிசைன் அப்படி .
ரொம்ப கொடூரமான கேவலமா இருக்கும்.

ஒரே ஒருநாள் ஸ்ரீஹரிகோட்டால  ராக்கெட் விடுறதை
பெருமையா பேசுறோம்,
தினம் தினம் பொது ஜனங்களின்
நவதுவாரங்களிலும் ராக்கெட் விட்டு
நாசப்படுத்தும் இந்தீய கோட்டா சீனிவாசராவ் வில்லத்தன  அரசியலை எப்போது காறித்துப்ப போகிறோம் ?

Tuesday, February 21, 2017

சிங்கம் 3 - ஒரு சமூக பார்வை !

சமீபத்தில் சிங்கம் திரைப்படத்தை பார்த்தேன் .அதில் துரைசிங்கம் என்கிற பிரதான போலிஸ் கேரக்டர் ,நாயகியிடம் , "பொம்பளப்புள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு வரக்கூடாதென "  சொல்லிவிட்டு செல்கிறார்.

ஏதோ போலிஸ் ஸ்டேஷனில் பெண் காவலர்களே இல்லாத நாடு போல,
பெண்கள் காவல்துறையிலோ ,காவல்நிலையத்திற்கோ வருவது தவறான செயல் என்கிற தொனியில் வைக்கப்பட்ட காட்சி போல இருக்கிறது.
இவர் சொல்வதுபடி பார்த்தால்,
பெண் காவலர்களை எல்லாம்,
போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியதான் 
நிக்கவச்சிருக்காங்களா ?
எந்த அடிப்படை சமூக அறிவே இல்லாமல்,எப்படி இந்த துரைசிங்கம்,
போலிஸ் உயர் அதிகாரியாக ஆனான் என்பதே சந்தேகமாக உள்ளது.
நாட்டுல மகளிர் காவல் நிலையம்லாம் இருக்குதுங்கிற விசயம் இந்த பக்கிக்கு தெரியுமா தெரியாதா ?

பெண்களின் பாதுகாப்பு கருதி சொல்லப்பட்ட வசனம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட,
போலிஸ் ஸ்டேஷனுக்கு பெண் சென்றால்,பாதுகாப்பில்லாத சூழ்நிலையில்தான் காவல்துறை செயல்படுகிறது என்பதை இந்த துரைசிங்கம் ஒப்புக்கொள்கிறானா?
அப்படியென்றால் காவல்துறை காவாளிகளை களைவதை விட்டுவிட்டு,
ஊர் பிரச்சினையை தீர்க்க வீராப்பாக 
கிளம்புவதெல்லாம் காமெடியாக தெரியவில்லையா ?
இதுபோன்ற குணநலன் கொண்ட சொறிநாய்களால்தான் ,டிஎஸ்பி விஷ்னுப்பிரியா மன உளைச்சலாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட செய்திகளாவது தெரியுமா ?தெரியாதா ?

முதல்ல பல்லை கடிச்சிட்டு பேசுறதுக்கு பதிலா,
ஏதாவது பயனுள்ளதா பேசு நாயே !

Monday, February 20, 2017

ஜக்கி வாசுதேவ் சாமிய நீங்க பார்த்திருக்கீங்களா ?

ஜக்கி வாசுதேவின் புகழை ?அறிந்த,
ஆட்டையாம்பட்டி இளைஞன் ஒருவன் ,
அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென கோவையை வந்தடைந்தான்.
ஈஷா மையத்திற்கு சென்று,சுவாமியை பார்க்கனும்னு ஆர்வத்தோடு கேட்டிருக்கிறான்.அவர்களும் நிச்சயமா பார்க்கலாம்,அதற்குமுன் அறக்கட்டளைக்கு 5000கட்டி சேவையை ஆற்றுமாறு கேட்டிருக்கிறார்கள்.
அப்ப்பாய்ண்ட்மெண்ட் பீஸ்சைத்தான்
அறக்கட்டளை நிதியென நாசூக்காக கேட்கிறார்களென அறியாத ஆட்டையாம்பட்டி இளைஞனும் 5000ரூபாயை கட்டி ,சுவாமியை பார்க்க காத்திருக்கிறான்.
நீண்ட காத்திருப்புக்குப்பின் ,லெவி ஜீன்ஸ்,ரேபான் கூலிங் கிளாஸ் ,ரீபோக் ஷூ அணிந்த ஒருவன்,
நம்மாள் அருகில் அமர்ந்து,சொல்லுங்கோ இன்னா வேணுமென கேட்டிருக்கிறான்.
இவனும் ஒரு டீ போதுமென அடக்கமாக கேட்டுக்கொண்டே சுவாமி எப்போ வருவாரென கேட்டிருக்கிறான்.
பதில் சொல்லாமலே கிளம்பியவனை பார்த்து,இளைஞன் புன்னைகைத்துக்கொண்டு ,"டீ"ல சக்கரை தூக்கலா இருந்தாலும் ஓகேவென சொல்லி காத்திருக்கிறான்.
டீயும் வரவில்லை,சுவாமியும் வரவில்லை.
நேரம் முடிந்துவிட்டதென அவ்விளைஞனை அப்புறப்படுத்த பார்த்த சேவகர்களிடம் , சுவாமிய நான் பார்க்கலையே என எவ்வளோ கெஞ்சியும் ,அவர்கள் பதிலேதும் சொல்லாமல் அவனை அனுப்பிவிடுவதிலயே குறியாக இருந்திருக்கின்றனர்.
இதுபோன்று பலரும் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு பணம் கட்டியதாகவும்,ஒரு கூலிங் கிளாஸ் குருட்டு நாய்,இன்னா வேனும் சொல்லுங்கோவென கேட்கிறானாம்,
"சுவாமி எங்கேவென கேட்டதும்",
டீ கொண்டுவருவதாக சொல்லி ஏமாற்றிவருவதாகவும் குறைபட்டுக்கொள்கிறார்கள்.

Friday, February 17, 2017

ஆல்பிரட் கதையும் ,போயஸ் ராணிகளும் !!!

பொதுச்சொத்துக்கள்,அரசுசொத்துக்களை வளைத்துப்போடுவது என்றாலே,அம்மாவுக்கும்,
சின்னம்மாவுக்கும் அலாதி பிரியம்.
தனியார் சொத்துக்களும் கூட ,இவர்களுக்கு பிடித்துவிட்டால்,யாராக இருந்தாலும் விடாப்படியாக பறித்து வளைத்துப் போட்டுவிடுவார்கள் .
இவர்கள் ஏதோ 91-96வரை மட்டுமே பொது-தனியார் சொத்துக்களை வாங்குவதில் (வளைப்பதில்) ஈடுபாடு காட்டியது போலவும்,அதன் பிறகு (திருந்திவிட்டது போல )எதுவும் வாங்காதது போல ஒரு பொது பிம்பம் கட்டமைக்கப்பட்டு வந்திருப்பதை பார்த்து,அம்மாவும் சின்னம்மாவுமே நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொள்வார்கள்.
சிறுதாவூர் பங்களா கேஸ்,பிரபல கொடநாடு எஸ்டேட் அபகரித்தல் ,
திராட்சை  தோட்டம் வழக்கு,
வெளிநாட்டு பண வரவு வழக்குகளென பல வழக்குகளை,பணம் கொடுத்தோ,
சட்ட ஓட்டைகளை வைத்தோ ,தப்பித்து வர கைதேர்ந்து விட்டவர்களாகி விட்டதால்,
91-96க்கு பிறகு ,வாங்கிய ,பிடுங்கிய சொத்துக்களை எல்லாம் ,
சட்ட ஓட்டைகளை வைத்து, சாமர்த்தியமாக சமாளிப்பதில் PHD முடித்துவிட்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு கூட ,1000கோடிக்கு தியேட்டர்களை ,ஊரறிய வளைத்துபோட்டதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.1000கோடி எப்படி வந்ததென நீங்கள் கோர்ட்டில் வழக்கு தொடுத்தால் கூட ,இவர்கள் அசால்டாக கோர்ட்டில் சமாளிப்பார்கள்.உங்களை அடாவடியாக அடித்தும் சமாளிப்பார்கள்.அது வேறு விசயம்.அந்தவகையில் சொத்துக்குவிப்பு வழக்கு இவர்களுக்கு கெடுதலை தந்ததை விட,பல வகைகளில் நன்மைகள் தந்திருக்கிறது.அந்தளவுக்கு சட்ட நெறிமுறைகள் படி கொள்ளையடிப்பதில் திறமைசாலிகளாக ?பரினாமம் அடைந்திருக்கிறார்கள்.
டார்க் நைட் என்கிற திரைப்படத்தில்,
ஆல்பிரட் ,பேட்மேன் ப்ரூஸ்சிடம் ஒரு கதை சொல்லுவார்.
அதில் வைரங்கள் அடிக்கடி கொள்ளையடிக்கப்படுகிறது.
ஆனால் அந்த வைரங்கள் எந்த கள்ளச் சந்தையிலும் கிடைக்காததால் ,காவல்துறையினர் குழப்பமடைகிறார்கள்.
பிறகுதான் தெரிகிறது ,வைரங்களை கொள்ளையடிப்பது அவன் வயிற்றுப்பாட்டுக்கு அல்ல,வைரங்களை திருடுவது அவனின் பொழுதுபோக்கு என.
இப்படித்தான் அம்மாவும்,சின்னம்மாவும் வயிற்றுப்பாட்டுக்காக சொத்துக்களை வளைக்கப்போய்,பிறகு அதையே பிடித்த பொழுதுபோக்காக மாற்றிக்கொண்டார்கள்.
இப்போது கூட பாருங்களேன்,
அரசின் பொது சொத்தான,மெரினாவில் அம்மாவும்,அரசின் சொத்தான பரப்பன அக்ரஹார ஜெயிலில் சின்னம்மாவும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Saturday, February 4, 2017

பவுடர் பங்கஜம் !!!

வெண்ணிற ஆடை
என்கிற புதிய படத்திற்காக
ஆர்ட்டிஸ்ட் தேர்வு நடைபெற்றது.
அப்போது முன்னனி நாயகியாக
இருந்த பவுடர் பங்கஜம் அவர்களையே
இப்படத்திற்கு புக் செய்திருந்தார்கள்,
அந்த சமயமாக பார்த்து,
கோமளவள்ளி என்கிற இளம்பெண் ஒருத்தி சான்ஸ் கேட்டு வருகிறாள்.
கதையிலோ மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்.
அதற்கு பவுடர் பங்கஜத்தை தவிர வேறு யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்பது ஹாலிவுட்காரர்களுக்கு கூட தெரிந்த விசயம்.
இந்த நேரத்தில் சான்ஸ் கேட்டு வந்த
கோமளவள்ளியை பார்க்க பாவமாக இருந்தது.என்ன செய்யலாமென ,இயக்குனர் ஸ்ரீதர் யோசித்தார்.விசயத்தை பவுடர் பங்கஜத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார் .
பவுடர் பங்கஜம் அவர்களோ
பெருந்தன்மையுடன் அந்த இளம்பெண் கோமளவள்ளியை வரவழைத்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டது போல நடித்து காட்ட சொன்னார்.ஓரளவு சுமாராக கோமளவள்ளியும் நடித்துக் காட்டினார்.
பிறகு இயக்குனர் ஸ்ரீதருடன் கலந்தாலோசித்த நடிகை பவுடர் பங்கஜம் ,வெண்ணிற ஆடை படத்தில்
நடிப்பதற்கான வாய்ப்பை கோமளவள்ளிக்கே விட்டுத்தந்தார்.
அந்த கோமளவள்ளி வேறு யாருமல்ல,
முன்னாள் முதல்வர் "ஜெயலலிதாதான் "!அத்தகையை ஜெயலலிதாவிற்கு நடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பவுடர் பங்கஜம் வேறு யாருமல்ல.
நம் மாண்புமிகு,தியாகத்தின் திருவுருவம் சின்னம்மா என்பது நம்மில்
கித்னி பேருக்கு தெரியும் ?
இப்போதாவது புரிகிறதா ?
நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல .

பிரபலமான பதிவுகள்