Loading

Sunday, July 30, 2017

விக்ரம் -வேதா !!!


போலிஸ் ரவுடிகள் செய்யும் கொலையை,
அதே போலிஸ்சை வைத்தே கொல்ல வைக்கும் சாமான்யனின் கதைதான் "விக்ரம் வேதா ".

படத்தோட கதையில எது சரி,எது தப்புங்கிறதை ,கதை சொல்லி ,கேள்வி கேட்டு புரிய வச்சிருக்காங்க .

உதாரணமா ..இந்த வருட.நிகழ்வுகளான,
மெரினா கலவரத்துல ,குடிசைக்கும் ஆட்டோக்கும், தீ வச்ச கான்ஸ்டபிளை நீங்க  அடிப்பீங்களா?
இல்லை அப்படி செய்ய சொன்ன ஐஜி யை ,அடிப்பீங்களானு உங்ககிட்ட கேள்வி கேட்டா,
உங்க பதில் என்னவா இருக்கும் ?

கதிராமங்களத்துல சொந்த வாழ்வாதரத்துக்கு போராடுற பெண்கள்  கிட்ட ,உன்னை பிராத்தலாக்கிடுவேன்னு ,
சொல்ற சாதரண ஏட்டையாவ விளாசுவீங்களா ?
இல்லை அப்படி சொல்லி,போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட தூண்டிய உயர் பதவி காக்கி ரவுடிகளை விளாசுவீங்களா ?

தர்மபுரி காதல் விவாகாரத்துல,
மொத்த காலனி யையும் எரிச்சு சாம்பலாக்கின தொண்டன்களை பொசுக்குவீங்களா ?இல்லை அப்படி செய்ய தூண்டின நயவஞ்சக  ? தலைவனை பொசுக்குவீங்களா ?



இந்த மாதிரி ,நம்மளை 
யோசிக்க வைக்க கூடிய வகைல 
நியாய அநியாயங்களை சரியான முறைல அலசிருக்காங்க.

காக்கி குண்டர்கள் செய்யும் திருட்டுத்தனங்கள், போலியான என்கவுண்டர் சித்தரிப்புகள்,அதனால் அடையும் பலன்களை ,உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறார்கள்.

பசிக்காக 1000ரூபா திருடுனவனை,
ஜெயில்லையே வச்சு கொல்லப்பட்ட செய்தியும்,
பேராசைக்காக 1000கோடி திருடுன ,
ஓநாய்ங்களுக்கு, இதே போலிஸ் பைரவாக்கள் சல்யூட் அடித்து வரவேற்குற நியுஸ்சையும் பார்த்துட்டு தான் இருக்கோம்.

விளை நிலமெல்லாம் ,விசமாகுதுனு பிட் நோட்டீஸ் கொடுத்தா ,குண்டாஸ்ல பதிவு செஞ்சு ஜெயில்ல அடைக்குற ,அதிகார குண்டர்களை ,
எந்த சட்டத்தின் மூலமா சிறையில அடைக்க முடியுது ?

முதலாளிகள் எல்லாம் அடிமைகளாக நடத்தப்படுவதையும்,
அடிமைகள் எல்லாம் முதலாளிகளாக  நடந்துகொள்வதையும் ஜனநாயகமென நம்ப வைக்கப்பட்டிருப்பதை ,இப்படம் 
காட்சிக் குறியீடுகளால் உணர்த்தியிருக்கிறது.

படத்தின் ஒரு காட்சியில் விக்கிரமாதித்தன்களுக்கு (அதிகாரிகள்)
வந்தா ரத்தம்,
வேதாளங்களுக்கு (உழைக்கும் மக்கள்)
வந்தா தக்காளி சட்னியா என 
கேட்கப்படும் வசனத்துக்கு,படத்தை பார்க்கும்  அடித்தட்டு ,நடுத்தர ,மக்களிடம் 
அப்ளாஸ் அள்ளுகிறது.

அதிகார போர்வையில்,
கொலைகார கும்பலாக திரியும்,
காக்கி ரவுடிகளை ,போட்டு தள்ளும் ஒவ்வொரு காட்சியையும் சாமான்யன் கைதட்டி வரவேற்கிறான்.

அது சாதாரண கை தட்டல் அல்ல, படத்திலாவது அதிகார கெட்டவர்கள்  சாகிறார்களே என்ற ஏக்கத்தின் தட்டல்  அது.

விக்ரம்-வேதா 
அதிகார அத்துமீறலும் -சாமான்யனின் போராட்டமும் !!!

Saturday, July 22, 2017

இது ஒரு ஜூ(போ)லி அரசு !!!

இந்த தமிழக அரசும்,பிக் பாஸ்
ஜூலி மாதிரிதான்.

ஆமா...
நான் காசு சம்பாதிக்கதான் பதவிக்கு வந்தேன்னு கூசாம சொல்வானுங்க.

ஏதோ நல்லது செய்ற மாதிரி நடிப்பானுங்க.டேய் நடிக்காதடானு ,யாராவது சொல்லிட்டா போதும்,
யாருங்க நடிக்குறது,எங்கம்மா ஹாஸ்பிட்டல கிடந்தாங்க தெரியுமா,
செத்துப்போய்ட்டாங்க தெரியுமானு சீன் போடுவானுங்க.

ஒருநாள் அக்கா ,அண்ணா,அருமை சகோதரர்னு பேசுவானுங்க,
அடுத்த நாளே,அவனே,இவணேனு ஒருமையில பேசுவானுங்க.

கேவலமான ஆட்சி நடத்துனாலும்,
நாங்க எவ்ளோ நல்லவங்க தெரியுமானு ,
செங்கோட்டையனை வச்சு தன்னைத் தானே நல்லவன் செர்ட்டிபிகேட் கொடுத்துக்குவானுங்க.

ஆகவே இந்த ஜூலி (போலி )அரசை ,
எலிமினேட் பண்ணனும்னா ,மறக்காம வோட் பண்ணுங்க !

விஜய்  டிவிக்கா பாஸ்னு எவனாச்சும்
கேட்டா,உங்களுக்குலாம் ஜூலி மாதிரி பொண்ணு(பையன்) தான்டா வாய்க்கும்னு சாபம் விட்டுக்குறேன்.

Wednesday, July 19, 2017

கமலும் -அமைச்சர்களின் ஊழலும் !!!

கமல் சொன்னது மாதிரி,
எல்லா துறையோட ஊழலை பத்தி , முன்னாடியே பல பேர்,ஆதாரங்களை திரட்டி பல நியூஸ் சானலுக்கு அனுப்பி பார்த்தோம்.
ஒரு கதையும் நடக்கலை,

உதாரணத்துக்கு மணல் கொள்ளையில ,
அமைச்சர்களோட பங்கு,மணல் முழுங்கி வைகுண்டராஜனோட பங்கு எவ்வளவுனு ,
தெளிவா நியுஸ்7 சானலுக்கு எடுத்து சொன்னோம்.
ராங் நம்பர் சார்னு சொல்லிட்டானுங்க.

அடுத்ததா,கல்லூரிக் கட்டணக் கொள்ளையில,
மெடிக்கல் சீட் சம்பந்தமா அமைச்சர்கள்,கல்லூரி அதிபர் அடிச்ச மகா கொள்ளையை பத்தி,
புதிய தலைமுறை சானலுக்கு எடுத்து சொன்னோம்.
இதை விட்ருங்க ,வேற எதுனா நியூஸ் இருக்கா  பாஸ்னு இளிச்சுட்டே வச்சிட்டானுங்க.

இந்த அம்பானி பய,
எப்படி எல்லா மாநில அமைச்சர்களுக்கும்,
தொழில் கொள்ளையடித்தல்,
சட்ட்பூர்வமா? நில அபகரித்தலுக்காக,
அட்வான்ஸ்சா அமவுண்டு கொடுத்து,
எப்படி கரெக்ட் பண்றாங்குறதை பத்தி,
நியுஸ் 18சானலுக்கு மெயில்லயும்,போன்லயும் சொன்னோம்.
கியா பையா,
ஊருக்கு புதுசானு கேக்குறானுங்க .

கடைசி முயற்சியா ,நடுநிலை சானலான ?
ராஜ் டிவிக்கு கூட அனுப்பி பார்த்தோம்,
அவன் போன ஜென்மத்துல ரிலீசான படகோட்டி படத்தையே இப்பதான் ,புத்தம் புதிய படம்னு ஓட்டிட்டு இருக்கான்.
நம்ம தகவலை ,தனுஷ் பையன் அரசியலுக்கு வரும்போதுதான் எடுத்து பார்ப்பான் போலிருக்கு.அதனால அந்த முயற்சியும் பலனில்லாம போச்சு.

அப்ப தந்தி டிவி பாஸ்னு நீங்க கேக்க வர்றது புரியுது,அவன் சானலுக்கு ஃபோன் போட்டு,ஹலோ சொன்னா கூட,
தாமரை மலர்ந்தே தீரும்னு,தமிழிசை டோன்ல
சொன்னதையே சொல்லிட்டு இருக்கான்.

சரி ..தப்பான அட்ரஸ்சுக்கு அனுப்பிட்டோம்னு,
ஊழல் தகவலை ,சானல் மாத்தி கூட அனுப்பி பார்த்தோம்.தொழில் போட்டியா இருந்தாலும்,பத்திரிக்கை அதர்மத்துல அன்ணன் தம்பியா பழகிருப்பானுங்க போல.
ஏதாவது ஆக்சிடண்ட் நியுஸ்,
அண்டார்ட்டிகா நியுஸ் எதுனாச்சும் கொண்டு வாயானு அசால்டா அனுப்பி விட்டானுங்க.

ஆனா இவனுங்கதான்,
கமல் அரசியலுக்கு வருவாரா,அமைச்சர்களின் ஊழலை வெளியிடுவாரானு ,காரசாரமா பெருமாள் மணியை வச்சு ,விவாதம் பண்ணிட்டு இருக்கானுங்க.

Saturday, July 15, 2017

உன் அண்ணன் என்னை காதலிக்கிறான்

என்னை நீண்ட நாளாக ஒருவன் டார்ச்சர் செய்கிறான்.நான் எங்கு சென்றாலும்,என்னை பின் தொடர்கிறான்.எப்போதும் என்னை சுற்றியே வருகிறான்.
அவன் வேறு யாருமல்ல,உன் அண்ணன் தான்.இதைக் கேட்டு ஆச்சர்யப்படாதே,
உன் அண்ணன் என்னை காதலிக்கிறான் என்கிற பேரதிர்ச்சியையும் கேட்டுவிட்டு ஆச்சர்யப்படு.

இந்த செய்தியை நீ நம்பாமல் இருக்கலாம்.ஆனால் உன்னை நம்பவைப்பதற்கு என்னிடம் ஏராளமான சம்பவங்கள் இருக்கிறது.

முதன் முதலில் உன்னிடம் காதலை தெரிவிப்பதற்கு ரோஜாவை கொடுத்தேன் இல்லையா,நீயும் வெட்கப்பட்டுக்கொண்டே வாங்கினாயல்லவா..
அன்றைய தினமே உன் அண்ணன்,
எனக்கு ரோஜா செடி புடிக்குமென்பதை தெரிந்துகொண்டு,ரோஜாக்கள் பிடுங்கப்பட்ட முள் செடியை,என் முதுகிலும்,மார்பிலும் ரோஜா நிறம் வருமளவுக்கு வருடி விட்டு சென்றான்.

நானும்..ஏதோ சிறுபிள்ளை,
அறியாமல் செய்துவிட்டதென,
நான்கு நாள் ஆஸ்பத்திரியில் ஹாயாக பெட் ரெஸ்ட் எடுத்துவிட்டு(அவ்வ்வ்,வலிக்குது நர்சம்மா) மறந்தே போய்விட்டேன்.

பிறகு ,உன்னுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே ,அவளும் நானும் பாடல் கேட்டோமே நியாபகமிருக்கிறதா?
பாடல் முடிந்ததும் நீ சென்றுவிட்டாய்,
நானும் கிளம்ப எத்தனிக்கையில்,
மீண்டும் அதே பாடல் ஒலித்தது.
அவனும் நானுமென பாடிக்கொண்டே என் முன் வந்து நின்றான் உன் அண்ணன்.

ஐஸ்க்ரீம் சாப்பிட்ட என் வாய் ,உன் அண்ணனுக்கு மிகவும் பிடித்திருக்கும் போல.ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுக்குமளவுக்கு அன்பு செய்துவிட்டு போய்விட்டான்.

இதையும் பெருந்தன்மையாய் மறந்து,உன் காதல் மட்டுமே முக்கியமென கருத்தில்கொண்டு,
அன்றொரு அழகிய நாளில்,உன்னை கட்டிப்பிடித்தேன் அல்லவா.
அதையும் ஒளிந்திருந்து,உன் அண்ணன் பார்த்து தொலைத்துவிட்டான் போல.
ஒரு வித மோதல் வெறியுடன்,ச்சி காதல் வெறியுடன் என்னை கட்டிப்பிடித்து,
ரோட்டில் உருண்டு புரள ஆரம்பித்தான்.

டேய் என்னை விடுடா,நான் அந்த மாதிரி ஆள் இல்லைடா என கத்திப் பார்த்தும் பலனில்லை,காதல் வெறியில் என்னை கைமா பண்ணி தொலைத்தான்.

அந்த கொடும் சம்பவத்தை மறக்க முடியாமல் ,இருந்த நேரத்தில்,
நீ என்னை தனியாக அழைத்து ,
சத்தமில்லாமல் முத்தமிட்டு மறக்க வைத்தாயல்லவா.
இதையும் எப்படியோ தெரிந்துகொண்டு ,
என்னை முட்டுசந்தில் மடக்கி வைத்து,

"நீங்க என்ன ஆளுங்கடா "என வினோதமாக கேட்டான்,
அது தெரியாது பாஸ்,
"ஆனா சத்தியமா நான் உன் ஆள் இல்லைடானு "தான் சொன்னேன்.
இதைப் போய் தாழ்வுமனப்பான்மையில் ,அவமானமாக நினைத்து ,ஆளவந்தான் நந்து கமல் போல அரை ஆடையாக்கி,என்னை அழகு பார்த்தான்.(அவ்வ்)

இதையும் உனக்காக பொறுத்துகொண்டு,ஓர் இனிமையான வேளையில் ,உன்னுடன் நெருங்கிப் பழகி உச்சமாக நினைக்கையில்,
அசம்பாவிதமாக உன் அண்ணன் என்னை ஓரக்கண்ணால் சைட்டடித்து,
என் உச்சக்கட்டத்தை உச்சாக்கட்டமாக 
ஆக்கித் தொலைத்தான்.
இதை உன்னிடம் சொன்னால்,உன் அண்ணனை அப்பல்லோவுக்கு அனுப்பி விடுவாய் என்பதால் அதையும் மறைத்து தொலைத்தேன்.

உன் தலையில்,செல்லமாக தட்டினால் ,
பதிலுக்கு என் தலையில் பாறாங்கல்லை வைத்து தட்டுகிறான்.உன் கன்னத்தை கொஞ்சலாக கிள்ளினால்,என் கன்னத்தை எம்பாமிங் செய்து வைக்கிறான்.

இன்னும் சொல்லப்போனால்,
நான் உன்னை டச் செய்ததை விட,
உன் அண்ணன் என்னை டச் செய்து ,டிச் செய்ததுதான் அதிகம்.
அவ்வளவு டார்ச்சர் செய்கிறான்.
ஈவ் டீசிங் கேள்விபட்டிருப்பாய்,
ஆடம் டீசிங் கேள்விப்பட்டதுண்டா ?
உன் அண்னன் செய்வது அதுதான்.

என் நிலையை மகாத்மா காந்தி அறிந்திருந்தால்,
என்று ஓர் ஆண் பட்டப்பகலில்,
எந்த தொந்தரவுமின்றி நடக்கிறானோ,
அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தமென்று கவலையுடன் கூறியிருப்பார்.

இறுதியாக ஒன்றை சொல்கிறேன்.
உன் அண்ணனிடம் மறக்காமல் கூறிவிடு.எத்தனை முறை என்னை வழிமறித்து கேட்டாலும்,
எடப்பாடி மீது சத்தியமாக ,
நான் அவனை காதலிக்கவே முடியாது.

Thursday, July 13, 2017

ஓவியாவும், ஒரு பிச்சைக்காரரும் !!!

பஸ் ஸ்டாண்ட்டில் நின்றுகொண்டிருந்தேன்.கார்ப்பரேட் உலகில் தூக்கி வீசப்பட்ட,மத்திய வயதில் இருக்கும் ஒருவர் ,அழுக்கடைந்த சட்டையுடன்,வரிசையாக கையை நீட்டிக்கொண்டே வந்தார்.என்னிடமும் கையை நீட்டினார்,சட்டைப் பாக்கெட்டின் அடியில் கிடந்த ரெண்டு ரூபாயை எடுத்து கொடுத்தேன்.
வாங்கிக்கொண்டு அருகில் இருந்த ஒருவரிடமும் கையை நீட்டினார்.
யோவ் ,வேலை எதுனா இருந்தா 
போய் பாருயா என யாசகம் கேட்டவரை ,
விரட்டிவிட்டார்.
அவரும் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் கடந்துவிட்டார்.

நான் ,யாசகம் கேட்டவர் ,நடந்துபோவதை பார்த்துக்கொண்டிருந்தேன்.அருகிலிருந்தவர் ,இவனுங்களை எல்லாம் நம்பக்கூடாது சார்.ஏமாத்திருவானுங்க.ஊர் ஊருக்கு நாலு பேர் இப்படி திரியுறானுங்க.அதான் நான் காசு போடலையென என்னிடம் சொல்லிக்கொண்டே,மொபலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தார்.

நான் ,பதிலேதும் சொல்லாமல்,
அவரின் மொபலை பார்த்துக்கொண்டிருந்தேன்.அதை உணர ஆரம்பித்திருப்பார் போல.
என்னை ஏறெடுத்து பார்த்து,
சார் ஓவியாவுக்கு ஒன்றை கோடி ஓட்டு விழுந்திருக்காம் தெரியுமா என கேட்டார்.
கேள்விபட்டேன் சார் என சொன்னேன்.

அதுல நானும் மெசேஜ் அனுப்பி ஓட்டு போட்டேன் சார் என என்னிடம் பெருமையாக கூறினார்.

இப்போது என் வாயில் ,எச்சில் ,
தானாக ஊறத் தொடங்கியிருந்தது.









Tuesday, July 11, 2017

இலுமினாட்டி காதல் சதிகள்

ஹாய்..
ஐ லவ் யூங்க ?

யாருயா நீ ?
உன்னை முன்ன பின்ன பார்த்ததே இல்லையே ?

நானும் தாங்க,
ஆனா ஐ லவ் யூனு சொல்ல சொல்லி ,
என்னை அனுப்பினாங்க.

யாருயா அனுப்பினா ?

கிட்ட வாங்க மிஸ்..
யார்கிட்டயும் சொல்லிடாதிங்க
என்னை அனுப்பினது இலுமினாட்டி க்ரூப்ங்க !

ஙே..
இழு மினாட்டியா ?
யாருயா அவனுங்க ?
சரி அத விடு,
அவனுங்க எதுக்குயா உன்னை அனுப்பனும் ?

அப்படி கேளுங்க,
இப்ப நான் ஐ லவ் யூ சொல்வேனாம்,
நீங்களும் ஓகேனு சொல்வீங்களா....ம்

என்னது ?

இல்லைங்க ஒரு பேச்சுக்கு வச்சுப்போமே,

சரி சொல்லு.

ஓகேனு சொன்னதும்.
கஃபே டே ஷாப் போவோமாம்,
கேஎப்சி போவோம்,
ஐ மேக்ஸ் தியேட்டர் போவோம்ல..

உன்கூட வா?

ஒரு பேச்சுக்கு சொல்றேங்க ..

சரி சரி.
சொல்லு

ஸ்டைலா லெவி ஜீன்ஸ் பேண்ட் வாங்குவோம்ல,
ஒரு லோடு பேர் அண்ட் லவ்லி வாங்குவோம்ல?

என்னது ?

இல்லைங்க..
நான் வாங்கி அப்பிப்பேன்ல,அத சொன்னேன்.

ஓ..ம்ஹும்.
சொல்லு

இப்ப நான் சொன்னதெல்லாம் பன்னாட்டு கம்பெனிங்களோட பெயர்,
அங்கெல்லாம் போய் நம்ம காசை கொட்டுவோம்ல.
அவனுங்க கல்லா கட்டுவானுங்கல்ல..

இதுதாங்க இலுமினாட்டி
கம்மினாட்டிங்களுக்கு தேவை.
அவனுங்க சம்பாதிக்குறதுக்கு நம்மள காதல் பண்ண சொல்லி,
நாலு வாரமா டார்ச்சர் பண்றானுங்க.
அதான் வேற வழியில்லாம ,
உங்க கிட்ட காதலை சொன்னேன்.

ஓ...சூப்பர்.
எனக்கு கூட ,இலுமினாட்டி க்ரூப் மெம்பர்ஸ்,
இந்த மாதிரி ஒருத்தன் வருவான்னு ,
சொல்லி வச்சிச்சு..

அட முன்கூட்டியே
சொல்லிட்டாங்களா..?
சூப்பர்.
என்னை பத்தி
என்ன சொன்னாங்க மிஸ் ?

அதொன்னுமில்லை,
அடிடாஸ்ங்கிற பன்னாட்டு கம்பெனில புதுசா இப்ப செருப்பு மாடல் போட்டிருக்காங்களாம்,
சோ ..
இந்த செருப்பு பிஞ்சிட்டா,
அந்த செருப்பை போய் வாங்குவேன்ல.
அவனுங்க கல்லா கட்டுவானுங்கல்ல.

அவ்வ்..
சாரிங்க..
எல்லாத்துக்கும் இந்த பரணி பயதாங்க காரணம்.
டேய் பரணி..இந்தா வர்றேன்டா
(எஸ்கேப்)

பிரபலமான பதிவுகள்