Loading

Monday, October 31, 2011

யார் தமிழன்??

இன்றைய நவீன ,சுயநலம் பெருத்துவிட்ட உலகில் ,நம்மை நாமே கேள்விகேட்டுக் கொண்டால் விழும் பதில்களை,கீழே தெரிவித்திருக்கிறேன்!
யார் தமிழன்  ?

பழம்பெருமைகளை எல்லாம் கடாசி விட்டு மேற்க்கத்திய மோகத்தில் அலைந்து திரிகிறவன் எவனோ ? ,அவன்தான்

யார் தமிழன்  ?

ஒரே நாளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நேரத்திலும், ஏர்கூலரில் காற்று வாங்கிக்கொண்டே "மழை விட்டும் தூவானம் விடவில்லை "என்ற  வசனத்தை உதிர்த்தவன் எவனோ ? அவன்தான்

யார் தமிழன்  ?

தமிழர்கள் சாகிறார்களே என கேட்டதற்கு ,போர் என்றால் சில அப்பாவி மக்கள் மடிவதும் இயல்பான விசயம்தான் ,என பொட்டில் அறைந்தார் போல் சொல்லத்தெரிந்தவள் எவளோ ? அவள்தான்  


யார் தமிழன்  ?



நம் கருத்திற்கு, எவன் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவனை ஆரிய இனமென்றும்,பார்ப்பன வகையை சேர்ந்தவன் என்று உடனே தீர்ப்பு சொல்பவன் எவனோ ? அவன்தான்



யார் தமிழன்  ?

மூன்று தண்டனைக்குரிய தமிழர்களை காப்பாற்ற ,தூக்கு தண்டனை வேண்டாமென முழங்கியதோடு அல்லாமல் ,ஒரு பகுதி தமிழர்களை கொன்றொழிக்க காரணமாக இருந்த அரக்கன் ராஜபக்ஷேவுக்கும் தூக்கு வேண்டாமென புதிய வழிமுறையை சொல்பவன் எவனோ ? அவன்தான் 

யார் தமிழன்  ?


தமிழனின் பெருமையை பற்றி திரைப்படம் எடுத்தால்,அதனை உலகதரத்திற்கு எடுத்துச் செல்ல முனையாமல் ,அந்த தமிழரையே கிண்டலடித்து ,படைப்பையும் மட்டம் தட்டுபவன் எவனோ ? அவன்தான் ........!




3 comments:

  1. நம் கருத்திற்கு, எவன் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவனை ஆரிய இனமென்றும்,பார்ப்பன வகையை சேர்ந்தவன் என்று உடனே தீர்ப்பு சொல்பவன் எவனோ ? அவன்தான்
    vanakkam nanba nanum madurai

    ReplyDelete
  2. வேர்ட் வெரிபிகேஷன் நீக்க இந்தப் பதிவைப் பார்க்கவும்.

    உங்கள் பிளாக்கரில் கருத்துப்பெட்டியின் கீழ் வரும் word verfication நீக்க

    உங்களுக்காகவே இப்பதிவை எழுதினேன். மறக்காமல் வந்து பார்த்துவிட்டு பயனடையுங்கள்..!! பிடித்திருந்தால் தங்கள் கருத்துகளையும் தெரிவிக்கலாம்.http://softwareshops.blogspot.com/

    ReplyDelete
  3. அப்படியா ,மிக்க நன்றி தோழா !

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்