Loading

Sunday, April 8, 2012

ஒரு கொலையும் ,கொலையின் பின்னணியும்


கடந்த வாரம் வெளியான ஒரு செய்தியும் ,அதன் அதிர்ச்சி பின்னணியும் 
இங்கே தந்திருக்கிறேன் ..




கர்ப்பத்தை கலைக்க முடியாததால் காதலியை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன் என கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.   ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது 24). இவர் சம்பவத்தன்று மர்மமான முறையில் கடலாடி ஊரணியில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாக்கிய லட்சுமியை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமியும், மேலக் கடலாடியை சேர்ந்த பரசுராமன் மகன் கார்த்திக் பாண்டி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து கார்த்திக் பாண்டியனை பிடித்து போலீசார் கிடுகிப்பிடி விசாரணை நடத்தினர்.   கார்த்திக் பாண்டியன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

பாக்கியலட்சுமியும், நானும் காதலித்து வந்தோம். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததால், அவர் கர்ப்பமானார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம். எனவே கருவை கலைக்க பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. எனவே பாக்கியலட்சுமியை சம்பவத்தன்று கடலாடி ஊரணிக்கு வரவழைத்து தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன்.

இதற்கு உடந்தையாக எனது நண்பர்கள் காளிதாஸ், குமரன் ஆகியோர் இருந்தனர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை எடுத்து கொண்டு தப்பினோம் என்றார். இதையடுத்து கார்த்திக் பாண்டியனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த காளிதாசையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குமரனை தேடி வருகின்றனர்.


இந்த செய்தியில் பல வெளிவராத விசயங்களை பார்ப்போம் ..



கொலையாளியான இந்த காதலன் ,இதுவரை பல பெண்களை 
உல்லாச வலையில் வீழ்த்தி வந்திருப்பதாக சொல்கிறார்கள் ..கொல்லப்பட்ட இந்த பெண் 
கொலையாளியின் இன்னொரு தொடர்புப் பெண்(திருமணமாகி கணவரைப் பிரிந்து இருப்பவள் ) மூலம் பழக்கமாகி இருக்கிறாள் .அந்தப் பெண்தான் 
இவனுடன் பழக்கத்தை ஏற்படுத்த துணை புரிந்திருக்கிறாள்.இதெல்லாம் காவல்துறையின் 
தீவிர விசாரணையின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தொடர்பான  பெண்தான் ,இந்த மூன்று பேரையும் 
போலீசாரிடம் காட்டிக் கொடுத்திருக்கிறாள்.

கொலையாளியின் கூட்டாளிகள் ,மது அருந்தி விட்டுத்தான் இந்த காரியத்தில் இறங்கினார்கள் 
என்று அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் .கொலையாளியிடம் அந்தப் பெண் ,ஏற்கனவே 
சில நகைகளை பறிகொடுத்து இருக்கிறாள் .இதனால் அந்தப் பெண்ணின் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால் 
,நகையை திருப்பி கேட்ட நேரத்தில்தான் ,இவர்கள் இந்த கொடும் காரியத்தை புரிந்திருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் , கொலையாளியின் கூட்டாளி 
பிடிபடுவதற்கு முன்பு ,இப்படி சொல்லியிருக்கிறான் .

"நாட்டுல அநியாயம் பெருகிப்போச்சு "!

No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்