Loading

Monday, March 10, 2014

தேர்தல் 2014(ஒரு பிரச்சார முன்னோட்டம் )

நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்தாகிவிட்டது !
சுட்டெரிக்கும் வெயிலில் தேர்தல் சூடும் கலந்துவிட்டதால்
இனி ஒன்றரை மாதத்திற்கு வெப்பநிலை சில டிகிரி செல்சியஸ்
கூடுதலாகவே காணப்படும் !


முக்கியத் தலைகளில் இருந்து முத்துன தலைகள் வரை
பிரச்சார வேன்களை துடைத்து வைத்து
மக்களைத் தேடி ஓடி பாய்ந்து பறந்து ஊர்ந்து
வரவிருக்கிறார்கள் ...
இந்தமுறை அவர்கள் எப்படி பேசி ..
மக்களை கவருகிறார்கள் என்பதை சிறு முன்னோட்டமாக பார்த்துவிடலாம் !
முதலில் ..

நாராயணசாமி !!!

அன்னை சோனியா தலைமயிலான இந்த ஆட்சி
தொடர்ந்தாதான் நாட்டு மக்கள் ,ஈழ மக்கள் ,
உலக மக்கள் ..செவ்வாய்கிரக மக்கள்? எல்லாரும்
சந்தோஷமா இருக்கமுடியும் !
அணுமின் நிலையத்தை 15நாள்ல? கொண்டுவந்தோம்..
அதே மாதிரி மீனவ பிரச்சினையையும் 15நாள்ல? முடிவுக்கு கொண்டுவருவோம்

பத்து வருஷம்தான் ஆட்சி நடத்திருக்கோம்..
எங்க ராசிப்படி? 15வருஷம் ஆட்சி நடத்தனும் ...
அதனால உங்க ஒவ்வொரு ஓட்டையும்
15ஓட்டா நினைச்சு எங்களுக்கு போடனும் !
எங்கள் கூட்டணியை?ஏரோப்பிளேன்
வைத்து மோதினாலும் தகர்க்கமுடியாது
ஊழலில்லாத ஆட்சியை எங்களால்? மட்டுமே தரமுடியும்
என்பதை கூறிக்கொண்டு இறுதியாக ஒரு கவிதையை வாசித்துவிடுகிறேன் !

"மரத்துல தொங்குது காயி "
படுக்கத் தேவை பாயி"
நீங்க மட்டும் எங்களுக்கு ஒட்டு போட்டீங்கன்னா "
நான் உங்க நாயி,நாயி நாயி !!!


விஜயகாந்த் !!

என்னை வாழவைக்கும் மக்கலுக்கு வணக்கம் !
மக்களே நிம்மதியா தூங்க முடியலை..
நீங்க தூங்குரீங்க்களா ?(மக்களை பார்த்து கேட்கிறார்)

(கூட்டத்தில் ஒருவர் )ஆ,நல்லா தூங்குனோம்ங்க

ஷ்ஷ்...குறுக்க பேசாதிங்க மக்கழே..
அப்புறம் டாப்பிக் தாண்டி போய்டுவேன் ..
அதாவது மக்கழே ...
மண்டபத்தை இடிச்சாங்க ,,எம்எல்ஏக்களை பிரிச்சாங்க..
அதெல்லாம் பார்த்து துளி கலங்க மாட்டான் இந்த விஜயகாந்த் !
எனக்குதான் நீங்க இருக்கீங்க மக்கழே ..
பயப்படமாட்டான் இந்த விஜயகாந்த் !

(பேச்சினிடையே ..
கொடியை உயர்த்தி பிடித்திருக்கும் தொண்டரை பார்க்கிறார்..)

தம்பி அந்த கொடியை கொஞ்சம் இறக்கி பிடிங்க
மத்தவங்க கேக்கனும்ல ..
நீ கொடியை தூக்கி மறைச்சின்னா எப்படியா
ஜனங்களுக்கு கேக்கும் /(ஞே)..
நீ அறிவாளின்னா நான் என்ன முட்டாளா ..கொடியை இறக்குடா..

அதாவது மக்கழே..
விவசாயம் ,விலைவாசி ,எல்லாமே உயர்ந்துடுச்சு
இதை தட்டிக் கேட்க வந்தவன்தான் இந்த விஜயகாந்த்
வழக்கு போடுவியா ..போடு
கோடி வழக்கு கூட போடு ,
ஒத்தை ஆளா சந்திக்கிறேன்
என் மக்கலுக்காக சந்திக்கிறேன்
யாருக்கும் அஞ்சமாட்டான் இந்த விஜயகாந்த்

ஆகவே மக்களே
பாஜக,மதிமுக ,
ஆப ப ப(வாய் ரோலிங்)
மற்றும் பல கட்சிகள் சேர்ந்த ...

சுருக்கமா இந்த கூட்டணி
ஒரு பலமான கூட்டணி ..
ஊழலல்ற ஒரு கூட்டணியை உங்களுக்காக அமைச்சிருக்கேன்
எனவே ..
எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய
"திமுகவுக்கு??? வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் !

அவ்வ்வ்வ் !

                                                                                                         தொடரும் .....

No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்