Loading

Monday, February 20, 2017

ஜக்கி வாசுதேவ் சாமிய நீங்க பார்த்திருக்கீங்களா ?

ஜக்கி வாசுதேவின் புகழை ?அறிந்த,
ஆட்டையாம்பட்டி இளைஞன் ஒருவன் ,
அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென கோவையை வந்தடைந்தான்.
ஈஷா மையத்திற்கு சென்று,சுவாமியை பார்க்கனும்னு ஆர்வத்தோடு கேட்டிருக்கிறான்.அவர்களும் நிச்சயமா பார்க்கலாம்,அதற்குமுன் அறக்கட்டளைக்கு 5000கட்டி சேவையை ஆற்றுமாறு கேட்டிருக்கிறார்கள்.
அப்ப்பாய்ண்ட்மெண்ட் பீஸ்சைத்தான்
அறக்கட்டளை நிதியென நாசூக்காக கேட்கிறார்களென அறியாத ஆட்டையாம்பட்டி இளைஞனும் 5000ரூபாயை கட்டி ,சுவாமியை பார்க்க காத்திருக்கிறான்.
நீண்ட காத்திருப்புக்குப்பின் ,லெவி ஜீன்ஸ்,ரேபான் கூலிங் கிளாஸ் ,ரீபோக் ஷூ அணிந்த ஒருவன்,
நம்மாள் அருகில் அமர்ந்து,சொல்லுங்கோ இன்னா வேணுமென கேட்டிருக்கிறான்.
இவனும் ஒரு டீ போதுமென அடக்கமாக கேட்டுக்கொண்டே சுவாமி எப்போ வருவாரென கேட்டிருக்கிறான்.
பதில் சொல்லாமலே கிளம்பியவனை பார்த்து,இளைஞன் புன்னைகைத்துக்கொண்டு ,"டீ"ல சக்கரை தூக்கலா இருந்தாலும் ஓகேவென சொல்லி காத்திருக்கிறான்.
டீயும் வரவில்லை,சுவாமியும் வரவில்லை.
நேரம் முடிந்துவிட்டதென அவ்விளைஞனை அப்புறப்படுத்த பார்த்த சேவகர்களிடம் , சுவாமிய நான் பார்க்கலையே என எவ்வளோ கெஞ்சியும் ,அவர்கள் பதிலேதும் சொல்லாமல் அவனை அனுப்பிவிடுவதிலயே குறியாக இருந்திருக்கின்றனர்.
இதுபோன்று பலரும் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு பணம் கட்டியதாகவும்,ஒரு கூலிங் கிளாஸ் குருட்டு நாய்,இன்னா வேனும் சொல்லுங்கோவென கேட்கிறானாம்,
"சுவாமி எங்கேவென கேட்டதும்",
டீ கொண்டுவருவதாக சொல்லி ஏமாற்றிவருவதாகவும் குறைபட்டுக்கொள்கிறார்கள்.

3 comments:

  1. super, surendra, guntur

    ReplyDelete
  2. புளுகி பிழைப்பவர்களை நாடினால் இது தான் நடக்கும்.

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்