Loading

Wednesday, May 23, 2012

கிராமத்து சம்பவங்கள் !

சமீபத்தில் அறிந்த  இரு சம்பவங்களை உங்களுடன் பகிர்கிறேன் !


வாழ வழியில்லாமல் இருந்த ஒருவன்,வெளிநாடு சென்று ஓரளவு காசு சம்பாதித்து ,மனைவிக்கு
அனுப்பி வைக்கிறான் ..எதுவுமே தெரியாமல் வாழ்ந்தவன் ,வெளிநாட்டு பகட்டு அவன் மீது
புதிதாக படிய ஆரம்பித்ததும் ,அவனுக்கு சுகபோகமாக வாழவேண்டும் என்ற ஆசை வருகிறது .
கிராமத்திற்கு வந்து சொந்த வீடு கட்டுகிறான் ,நகைகளை வாங்குகிறான் ..இவன் உழைப்பால்
உயர்ந்தவன் என்று ஊர் பாராட்டிக் கொண்டிருக்கையில் ,அவனுடைய மனைவி மட்டும் கவலையில்
உடைந்து கிடக்கிறாள் ..

என்ன விஷயம் என விசாரித்தால் ,அவளுக்கு ஒரு திருமணமாகாத தங்கை ஒன்று இருக்கிறது .
எந்நேரமும் இவளின் கணவன் அவளிடம் கொஞ்சுவதும் ,சிணுங்க விடுவதுமாக செய்து ,
அவளை கர்ப்பவதியாக்கி விடுகிறான்  .இதையறிந்த பொதுமக்கள்  பஞ்சாயத்தை கூட்டுகிறார்கள் ..
ஏன் இப்படி செய்தாய் என அவனை கேட்கிறார்கள் .என் மனைவிக்கு வயசாகிவிட்டது ,
அதனால் வேறு வழியில்லாமல் இதை செய்துவிட்டேன் என கூறுகிறான் .பஞ்சாயத்து பெருசுகள் ,
ரெடிமேட் தீர்ப்பை ஒன்றை வழங்குகிறது ..கற்பழித்தவனே திருமணம் செய்ய வேண்டும் என்ற
கொள்கைப்படி ,அவனின் மச்சினிச்சியை திருமணம் முடித்து வைக்கிறார்கள் . ..

மச்சினிச்சியை மாட மாளிகையில் வாழவைத்து ,தன் முதல் மனைவியை
நட்டாற்றில் விட்டுவிடுகிறான்  ..இதனால் மிகவும் பலகீனமடைந்த நிலைக்கு ஆளாகுகிறாள் தற்போது ,உடல்நிலை சரியில்லாமல்
படுத்த படுக்கையாக கிடந்து ,பழைய சந்தோஷ வாழ்க்கையை நினைத்துக்கொண்டிருப்பதாக அறிய முடிந்தது .
.
மற்றுமொரு சம்பவம் !

எந்நேரமும் குடி கும்மாளமுமாக வாழ்க்கையை அனுபவிக்கும் கிராமத்து  இளைஞனை நினைத்து 
அவனுடைய பெற்றோர்கள் வருத்தப்படுகிறார்கள் ..சரி திருமனம செய்துவைத்தால் 
சரியாகிவிடுவான் என நினைத்து ,அவனுக்கு திருமணம் முடிக்கிறார்கள் .
ஒருவகையில் ,அது கொஞ்சம் நல்ல பலனை கொடுத்தது .
கும்மாளத்தை விட்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டான் ..ஆனால் 
தமிழக அரசின் வருமானத்தை பாதிக்கும் என்பதால் குடியை மட்டும் விடவே இல்லை ..
குடும்ப வாழ்க்கையின் மூலம் மூன்று குழந்தை செல்வங்களை பெற்றான் ..
குடும்பம் பெருத்தது ,குடியும் பெருத்துப்போனது ..
இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத பெண் வீட்டார்கள் 
அவனுடன் சண்டை போட வேண்டிய துரதிஷ்ட நிலையும் வந்தது ..
பஞ்சயாத்தை கூட்டி நம்மை அசிங்கப்படுத்தி விட்டார்களே என எண்ணி ,,
குடிபோதையில் ,எலி மருந்தை குடித்து ..ஒரு லட்சத்திற்கும் மேல் 
பெண் வீட்டாருக்கு செலவு வைத்து விட்டு பரலோகம் சேர்ந்துவிட்டான் ..

இந்த இரண்டு சம்பவங்களிலும் ,பெண்களே பாதிக்கப்பட்டு இருப்பதை 
அறிய முடிகிறது ..கிராமத்திலும் நல்லொழுக்கம் குறைந்து வருகிறதென்பதையே 
இந்த சம்பவங்கள் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது ..

இதுவும் கடந்து போகும் !

1 comment:

  1. கிராமத்தை படம் பிடித்து காட்டி இருக்கிறிர்கள் நண்பா அருமை

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்