Loading

Thursday, July 13, 2017

ஓவியாவும், ஒரு பிச்சைக்காரரும் !!!

பஸ் ஸ்டாண்ட்டில் நின்றுகொண்டிருந்தேன்.கார்ப்பரேட் உலகில் தூக்கி வீசப்பட்ட,மத்திய வயதில் இருக்கும் ஒருவர் ,அழுக்கடைந்த சட்டையுடன்,வரிசையாக கையை நீட்டிக்கொண்டே வந்தார்.என்னிடமும் கையை நீட்டினார்,சட்டைப் பாக்கெட்டின் அடியில் கிடந்த ரெண்டு ரூபாயை எடுத்து கொடுத்தேன்.
வாங்கிக்கொண்டு அருகில் இருந்த ஒருவரிடமும் கையை நீட்டினார்.
யோவ் ,வேலை எதுனா இருந்தா 
போய் பாருயா என யாசகம் கேட்டவரை ,
விரட்டிவிட்டார்.
அவரும் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் கடந்துவிட்டார்.

நான் ,யாசகம் கேட்டவர் ,நடந்துபோவதை பார்த்துக்கொண்டிருந்தேன்.அருகிலிருந்தவர் ,இவனுங்களை எல்லாம் நம்பக்கூடாது சார்.ஏமாத்திருவானுங்க.ஊர் ஊருக்கு நாலு பேர் இப்படி திரியுறானுங்க.அதான் நான் காசு போடலையென என்னிடம் சொல்லிக்கொண்டே,மொபலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தார்.

நான் ,பதிலேதும் சொல்லாமல்,
அவரின் மொபலை பார்த்துக்கொண்டிருந்தேன்.அதை உணர ஆரம்பித்திருப்பார் போல.
என்னை ஏறெடுத்து பார்த்து,
சார் ஓவியாவுக்கு ஒன்றை கோடி ஓட்டு விழுந்திருக்காம் தெரியுமா என கேட்டார்.
கேள்விபட்டேன் சார் என சொன்னேன்.

அதுல நானும் மெசேஜ் அனுப்பி ஓட்டு போட்டேன் சார் என என்னிடம் பெருமையாக கூறினார்.

இப்போது என் வாயில் ,எச்சில் ,
தானாக ஊறத் தொடங்கியிருந்தது.









2 comments:

  1. Nalla vela thuppa ma vittuteenga.

    ReplyDelete
  2. என்ன இருந்தாலும் வசதி உள்ள பிச்சைகாரர்களுக்கு பிச்சை போடுவது ஒரு பெருமைதானே!
    :(
    வேதனையடா சாமி!

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்