Loading

Saturday, December 10, 2011

என்ன செய்யலாம் உன்னை ?


நீ செய்த காரியத்திற்கு
உன்னை என்ன செய்யலாம் ?

குளியலறையில்
ஈரம்சொட்ட இருமணிநேரம்,
நிற்கவைக்கலாமா ?

தூக்கநேரத்தில்
துரியோதனின் துஷ்ப்ரயோகத்தை
அரங்கேற்றி விடலாமா ?

இல்லை ,28ம் தேதி வேளையில்,
உன்னை அந்தப்புரத்திற்கு,
அவசரமாக அழைக்கலாமா ?

சில முக்கிய இடங்களில்
காயத்தை ஏற்ப்படுத்தி
ஆச்சர்யப்படுத்தலாமா ?

இந்த நான்கில்
என்ன தண்டனை கொடுக்கலாம் ?

நீ செய்த சக்கரை இல்லாத கேசரிக்காக .

6 comments:

  1. பிறரை தண்டிக்க நினைப்பவர்கள் தங்களைப்போல் இருந்துவிட்டால், எந்த பிரச்சினையும் இல்லை. அருமை. தொடருங்கள்

    ReplyDelete
  2. கமென்ட் செய்ததற்கு நன்றி :-)

    ReplyDelete
  3. ரசிக்க வைக்கிறது நண்பரே..

    தொடருங்கள்..

    ReplyDelete
  4. மிக்க நன்றி சம்பத் குமார் அவர்களே :-)

    ReplyDelete
  5. கலக்கிட்டிங்க நண்பரே..எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. @குமரன் அவர்களே மிக்க நன்றி !

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்