Loading

Tuesday, November 8, 2011

முதல் இடத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி !


ஒரு தொலைகாட்சியை தொடங்கி சில மாதங்களில்  நம்பர் 1 இடத்தை பிடிக்க முடியுமென்றால் ,அது அசாதரணமான விஷயம் ,அந்த விசயத்தை செய்துமுடித்திருக்கிறது புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி !

தமிழகத்தில் செய்திகள் என்றாலே "சன் செய்திகள்" என்று அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்தது சன் டிவி ,நாளடைவில் ஜெயா நியுஸ், ராஜ் நியுஸ் ,கலைஞர் செய்திகள்,போன்ற முழு நேர செய்தி சேனல்கள் வந்த போதிலும் ,சன் நியுஸ் சேனலை மட்டுமே பார்த்து வந்தவர்கள் தமிழகத்தில் ஏராளம் !


தமிழகத்தில் என்னதான் நிறைய செய்தி சேனல்கள் இருந்த போதிலும் ,நடுநிலைத்தன்மை என்பது கடுகளவில் கூட கிடையாது .இவர்கள் நினைத்தால் ,அயோக்கியனை கூட உத்தமனாக்கி விடுவது போலவே ,செய்திகளின் லட்சணம் இருந்து வந்தது !இந்நிலையில் ,புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இது எந்த கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சி என்பதற்காகவே, செய்திகளை பார்த்தவர்கள் ஏராளம்.ஆனால் ,மக்கள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே செய்திகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள்.


ஆங்கில செய்தி சேனல்கள் பாணியில், செய்திகளை தொகுத்து வழங்கிய விதம் ,தமிழக மக்களுக்கு புதிதாக தோன்றியது! அரசியல் நிகழ்வுகளின் அலசல்கள் ,சமூக விழிப்புணர்ச்சி ஆக்கங்கள் என கொஞ்சம் புதிய பாணியில் வழங்கிய விதம் ,பொதுவாக எல்லாருக்குமே பிடித்திருந்தது !இந்நிலையில் தான் நேற்றைய கருத்துகணிப்பு வெளியாகியது.,தமிழகத்தின் செய்தி சேனல்களில் முதல் இடத்தை ,இது வரை தக்கவைத்துக் கொண்டிருந்த சன்நியுஸ் சேனலை ,பின்னுக்கிழுத்து புதியதலைமுறை தொலைக்காட்சி முதல் இடத்தை பிடித்திருக்கிறது !


 புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் !


No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்