Loading

Wednesday, November 2, 2011

மாறவில்லையா ஜெயலலிதா ?



எந்த விசயத்தையும் எடுத்தேன் ,கவிழ்த்தேன் என முடிவெடுப்பதில் ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான் என சொல்லிவிடலாம் !ஆட்சிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுவிடுமோ என்ற துளி பயமில்லாமல் எதையாவது செய்து தொலைப்பது அம்மையாரின் ஆதி குணங்களில் இதுவும் ஒன்று .



நேற்றைய அறிக்கையில் ,சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை அதிநவீன குழந்தைநல மருத்துவவமனையாக மாற்றப்படுமென அறிவித்தார் .சில மாதங்களுக்கு முன்புதான் ,கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்டார்,அதை செயல்படுத்துவதற்கு முன்னமே மற்றுமொரு மருத்துவமனை என்ற அறிக்கை வந்து விழுகிறது.

இதில் மக்களுக்கான மருத்துவமனையாகத்தானே மாற்றப்போகிறார்கள் என்ற எண்ணத்திற்கு பதிலாக, ஒருவித மனக்கசப்பே தோன்றுகிறது, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளை முதலில் சீரமைத்தாலே பெரும்பாலான மக்கள் பயனடையலாம் என்ற நிலை இருக்கையில், கடந்த ஆட்சியாளர்களை பழி வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த முடிவாகத்தான் தோன்றுகிறது.




குழந்தநலப் பிரிவை ஓமந்தூரார் கட்டிடத்திலேயே அமைக்கலாமே ,அங்கு இல்லாத இட வசதியா ?நூலகம்தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை மேலோட்டமாக காட்டக்கூடிய ஒன்று. இருக்கிற புத்தகங்களை ஒரு பாழடைந்த கட்டிடத்தில் மாற்றி செல்லரித்து போவச்செய்வதுதான் வளர்ச்சியா ?

எவ்வளவோ நலத்திட்டங்கள் நிலுவையில் இருக்கையில் ,அதைசெயல்படுத்த முனையாமல் ,எதையாவது தான்தோன்றித்தனமாக செய்வதற்கா உங்களை முதல்வர் வேலையில் பணியமர்த்தினோம் ?கொஞ்சமாவது மாறுங்கள் !


1 comment:

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்