Loading

Tuesday, August 16, 2011

ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!


பிறப்பு முதல் இறப்பு வரை ,ஜாதி என்ற ஒரு விஷ ஜந்து,, நம்மை அலைக்கழிக்கும் விதம் பெரிய மலைப்பை உண்டாக்குகிறது !!ஒன்றாய் படிக்கும் பள்ளித்தோழர்களே ,பின்நாட்களில் தன் ஜாதியின் வீரியம் தெரிந்து ,அடித்துக்கொள்ளும் காட்சியை, தமிழகம் நிறைய பார்த்திருக்கிறது !

தென்மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்கள் இல்லாத வருடங்களே கிடையாது !!என் வீட்டில் கூட ,, இரு ஜாதிகளின் பெயர்களை சொல்லி ,, அவர்களிடம் பழக்கம் வைத்துக்கொள்ளாதே என அறிவுறுத்தப்பட்டே வெளியே அனுப்பி வைக்கிறார்கள் !!

சில வீடுகளில் ,,தன் பிள்ளைகளின் பிஞ்சு வயதிலேயே ,ஜாதியின் வீரியத் தன்மையை ,,விஷமென்று அறியாமல் விதைத்து விடுகிறார்கள் !! பின்நாட்களில் அந்த பிள்ளைகள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் ,,ஜாதிக்கலவரம் என்று வந்துவிட்டால் ,தன் ஜாதியின் பக்கம் சேர்ந்துவிடுகிறார்கள் .

சில நண்பர்கள் ,,இதற்க்கு விதிவிலக்கு என்றாலும் ,,சமூகம் அவர்களையும் ஜாதிப் பிடியில் சிக்கவைக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள் !! தென்மாவட்டங்களில் ,குறிப்பாக ,,ராமநாதபுர மாவட்டத்தில் ,ஜாதி மோதல்களால் ,வருடத்திற்கு இரு கொலைகள் வீதம் ,,தவறாமல் நடக்கிறது .

குறிப்பாக ,,சில விசேஷ நாட்களில் ,,காவல்துறையின் பாதுகாப்பையும் மீறி , ஜாதி மோதல்கள் எழுந்துவிடுகிறது!
கடைகளை சூறையாடுதல் ,,வீடுகளுக்கு தீ வைத்தல் ,,போன்ற பழ விஷயங்களை ,,ஜாதி வெறியர்கள் நிகழ்த்திவிடுகிறார்கள் !!


ஆட்சியாளர்களும் ஜாதி ஓட்டுக்கள் போய்விடும் என்ற அல்ப ஆசைக்காக ,,தமிழகத்தில் ஜாதி வெறியர்களை ,கண்டுகொள்ளாமல் விடுகிறது ,,ஒட்டு மொத்த தமிழகமும் ,,பாரதியின் ,ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடலின் ,,இரண்டாம் வார்த்தையை  மாற்றி எழுதி, பல வருடம் ஆகிவிட்டது !!

No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்