Loading

Thursday, August 11, 2011

நாயக்கர் மஹாலை கெடுத்த சினிமா குழுவினர் !


மதுரையில் பெருமை வாய்ந்த பொக்கிஷங்கள் இரண்டு ! 1 . மீனாட்சி அம்மன் கோவில் ,,2. திருமலை நாயக்கர் மஹால் !

இவ்விரு பொக்கிஷங்களையும் ,,முடிந்த மட்டும் பாழ்படுத்தி விட்டார்கள் நம்மூர் யோக்கியவான்கள் .முன்பெல்லாம் மீனாட்சி அம்மன் கோவில் வெளிவாசல் வரை ,,லாரிக்காரனும் ,,ஆட்டோக்காரனும் உரசிக்கொண்டு போவார்கள் ! பல முறை மனு கொடுக்கப்பட்டதால் ,அங்கு வாகன உபயோகம் தடைசெய்யப்பட்டு ,தாமதமாக புண்ணியம் தேடி கொண்டார்கள் !

திருமலை நாயக்கர் மஹாலை ,,மதுரைக்கார்களே பொக்கிஷமாக ,நினைக்கத் தவறிவிட்டார்கள் !! ஏதோ சினிமாக் காரர்களுக்கு மட்டுமே உபயோகப்படுகிற விஷயம் என நினைத்து விட்டார்கள் போலும் ..சினிமாக் கார்களுக்கு குறைந்த செலவில் வாடகைக்கு ,இந்த மஹால் கிடைத்து விடுகிறது !ஏற்கனவே பொக்கிஷங்கள் பலவற்றை ,கால இடைவேளையில் இழந்த நாயக்கர் மஹால் ,படப்பிடிப்பு  .குழுவினரால்  முற்றிலுமாக பாழ்பட்டு விட்டது .அவர்கள் பாதி தரைத்தளங்களை பெயர்த்து விட்டார்கள் ..

மகாலின் மேற்புறம்  செட் போடுகிறேன் ,பேர்வழி என்று ஒருவழி பண்ணிவிட்டார்கள் ,,கேட்கத்தான் நாதியில்லை ,,மிகப்பெரிய   தூண்களில் ,கலர் துணிகளை கட்டி ,அதன் பளபளப்பை குறைத்து ,அதன் முக்கிய சாராம்சத்தையே இல்லாமல் செய்துவிட்டார்கள் .
மிகவும் தாமதமாக விழித்துக்கொண்ட மதுரை வக்கீல் ,கிளை நீதிமன்றத்தில் ,,படப்பிடிப்பு நடத்த தடை ஆணையை ,பெற்றிருக்கிறார் !

"மஹால் மீண்டும் பழைய பொலிவைப் பெற ,நாயக்கரே மீண்டும் உயிர்த்தெழுந்தால்தான் உண்டு "!

No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்