Loading

Wednesday, August 10, 2011

தோனியின் மூன்றாம் சறுக்கல் !



தோனி அணியை ,தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் ,இன்று முகம் தொங்கி போயிருக்கிறார்கள் !பெற்ற வெற்றிகளுக்கு திருஷ்டியாக இங்கிலாந்தில் ,http://cricket.yahoo.com/photos/cricket-photos-of-the-week---7-8-11_13127175296030#1 அடி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் .இதோ ,இப்போது கூட மூன்றாம் டெஸ்டில் ,தட்டுத் தடுமாறி இருநூற்று சொச்ச ரன்களில் சுருண்டது நம் இந்திய அணி !

பெற்ற வெற்றிகள் பெரிதல்ல ,பெறப்போகும் வெற்றிகளையே ரசிகர்கள் கொண்டாடுவார்கள் !இதுவரை உள்ளூர் தொடரில் மட்டுமே பிரகாசித்த இளம் வீர்கள் ,அங்கு ஆட்டம் கண்டு போயிருக்கிறார்கள் !இங்கு பெற்ற வெற்றியை வைத்து எடைபோட்டவர்கள் ,,வெளிநாட்டுத் தொடரில் ,தோனியை எடை போட வேண்டிய நேரமிது .

ஒன்றை கவனித்து பார்த்தால் ,நன்றாக புரியும் ,ஆதி காலந்தொட்டே ,அதாவது இருபதாம் நூற்றாண்டில் இருந்தே ,இந்திய அணிக்கு வெளிநாட்டுத் தொடர் என்றாலே ,சுத்தமாக ஆகாது .ஏதோ ஒன்றிரண்டு வீரர்கள் ,சதமடித்து திருப்தி பட்டுக் கொள்வார்கள் ,அந்தக்கதை இந்த இங்கிலாந்து தொடரிலும் தொடர்கிறது .

ஆஸ்திரேலியா ,இங்கிலாந்து ,தென் ஆப்ரிக்கா, தொடர் என்றாலே ,இந்திய அணிக்கு அலர்ஜிதான் ,,வேகப் பந்துவீச்சை சமாளிக்கும் தகுதி உள்ள திராவிட் ,லட்சுமன் ,சச்சின் போன்றோர்களே திக்கித் திணறுவார்கள் !இதில் தோனி பாய்ஸ் மட்டும் விதிவிலக்கா என்ன ??
இந்த மூன்றாம் டெஸ்டில் கூட ,இந்தியாவுக்கு வெற்றி என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது ! நம்பர் 1 இடமும் போச்சு ! தோனியின் முகமும் கிழிஞ்சிபோச்சு !

பி .கு ! இது தெரியாமல் ,சச்சினின் நூறாவது சதம் பற்றி ,,ஏங்குபவர்கள் ,அடுத்த டெஸ்டிலும் ஏங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது !

No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்