Loading

Monday, August 29, 2011

டிவிட்டரில் _தமிழ் கீச்சர்களின் சண்டை !



கடந்த மூன்று நாட்களாக ,ட்விட்டரில் ,ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது !சாந்தன் ,முருகன் ,பேரறிவாளன் இந்த மூன்று பேரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டதால் ,தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் படுகிறது !

இதையொட்டி ட்விட்டரிலும் மரணதண்டனையை எதிர்த்து ஒரு தரப்பிலும் ,மரணதண்டனையை ஆதரித்து மற்றொரு தரப்பினரும் கருத்து யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .
மூன்று நாட்களாக நடக்கும் கருத்து யுத்தம் ,ஒருகட்டத்தில் ,எதிர் கருத்து தெரிவிப்போரை ,ஒரு சிலர் தகாத வார்த்தைகளில் சொல்லி காயப்படுத்த ,இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் ,இரண்டு பிரிவாக பிரிந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது !

இதன் உச்சகட்டமாக ,பிரபல கீச்சர் ஒருவர் , விஷயத்தை ஜாதி ரீதியாக அணுக ,அதையும் ஒரு சிலர் ஆதரிக்க ,பிரச்சினை  வேறு தளத்திற்கு செல்ல ஆரம்பித்திருக்கிறது !இதையொட்டி  பலபேர் ஒருவரை ஒருவர் ப்ளாக் செய்வதும் ,அன்பாலோவ் செய்வதும் இந்த மூன்று நாட்களில் நடந்தேறியிருக்கிறது.

கருத்து பரிமாற்றம் ,தனி நபர் தாக்குதலாக வடிவமெடுத்திருப்பது ,நடுநிலை ட்விட்டர்கள் இடையே ஒருவித வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது .இதனால் ,பல தமிழ் ட்விட்டர் பயனாளர்கள் எந்தக் கருத்தும் கூறாமல் ,மூன்று நாட்களாக மொத்த ட்விட்டர் டைம்லைனும் ,நெருப்பான வார்த்தைகளில் எரிவதை வேடிக்கை பார்க்கிறார்கள் !

எல்லாவற்றையும் தாண்டி ,தமிழ் கீச்சர்கள் மீண்டும் நட்புடன் திரும்பவேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருக்கிறது !

No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்