Loading

Wednesday, August 10, 2011

கலைஞர் டிவியின் செய்தித் தரம் !


கலைஞர் தொலைக்காட்சியின் ,,செய்திப் பிரிவை பற்றி கண்டிப்பாய் சொல்லியாக வேண்டும் !  ஒவ்வொரு செய்திகளையும் அவர்கள் அலசி ஆராயும் பாங்கு யாருக்கும் வராது ! நேற்று கூட சமச்சீர் கல்வி பற்றி  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் வழங்கியது !! கலைஞர் டிவியின் செய்திப் பிரிவு ,,ஏதோ ஜெயலலிதா அரசு கவிழ்ந்தது போல் ,,ஒரே உற்சாக நேர்காணல்கள் நடத்துகிறார்கள் !!
 
அதிலும் ,,செய்தி வாசிக்கிறவர் ,,ஏதோ தனக்கு பரிசு கிடைத்தது போல் உற்சாகமாக பேசுகிறார் . அவர் சொல்கிறார் ,,இப்போதுதான் தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும் ! இந்த அரசு எதை வேண்டுமானாலும் செய்து விடும் என்று . அதிலும் சுப .வீரபாண்டியன் வேறு ,,இன்னும் ஒரு படி மேலே போய்,,மக்கள் அனைவரும் வீதியில் போராடியதாலையே  இந்த தீர்ப்பு கிடைத்தது என்றும் ! தமிழகம் காப்பற்றப்பட்டது என்றும் பேசினார்கள் !

ஏதோ ,தமிழகம் ,,அடக்குமுறையில் வாழ்வது போலவும் ,,இவர்கள் நம்மை காப்பாற்றியது போலவும் ,,அப்பப்பா ,என்னா ஒரு மிகைபடுத்தல் செய்தி !இப்படிதான் தேர்தல் நேரத்திலும் ,,ஆதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உடைந்துவிட்டது ,,இனி அவர்கள் சேர வாய்ப்பே இல்லையென்று ,,ஒரு நிருபர் கூறுகிறார் ! தமிழர்கள் எல்லாம் சர்வ மடையர்கள் என நினைத்திருக்கிறார்கள் போல !எதை சொன்னாலும் கேட்டுவிடுவோம் என்ற நினைப்பு அவர்களுக்கு !
முதலில் செய்திகளை எப்படித் தருவது என்று  யாராவது ,இவர்களுக்கு சொல்லித்தந்தால் தேவலை !

2 comments:

  1. இதுக்கே இப்படி அலறுகிறானுகளே..ரொம்ப பெரிய பிரச்சனைன்னா எப்படி உளருவானுக...

    ReplyDelete
  2. சரியா சொன்னீங்க ,,மிகவும் பயந்து போய் இருக்கிறார்கள் ,என நினைக்கிறேன்

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்